பர்சனல் கம்ப்யூட்டர் விற்பனையை அதிகரிக்க லெனோவா புதிய உத்தி

பர்சனல் கம்ப்யூட்டர் விற்பனையை அதிகரிக்க லெனோவா புதிய உத்தி
Updated on
1 min read

தமிழகத்தில் பர்சனல் கம்ப்யூட்டர் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் லெனோவா நிறுவனம் ஸ்டார்ட் அப் வித் லெனோவா எனும் புதுமையான திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி சுலப தவணைத் திட்டத்தில் வட்டி யில்லா கடன் மூலம் பர்சனல் கம்ப்யூட்டர்கள், மடிக் கணினி களை (லேப்டாப்) மாணவர்கள், பொதுமக்கள் வாங்க முடியும்.

ஆந்திரம், தெலங்கானா, குஜராத், பஞ்சாப், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இத்திட்டத் துக்கு கிடைத்த பெரும் வரவேற் பைத் தொடர்ந்து இத்திட்டத்தை தமிழகத்தில் பிரபலப்படுத்த இந்நிறுவனம் முடிவு செய் துள்ளது. இதன்படி சென்னையில் இத்திட்டத்தை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகுல் அகர்வால் தொடங்கி வைத்தார்.

ஏஐஓ மற்றும் லேப்டாப்கள் வாங்க வட்டி இல்லாமல் குறைந்த பட்சம் மாதத் தவணையில் ரூ. 3 ஆயிரம் வீதம் 7 மாதங் செலுத்தும் வகையில் திட்டத்தை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்காக பஜாஜ் ஃபைனான் ஷியல் சர்வீசஸ் நிறுவனத்துடன் இந்நிறுவனம் ஒப்பந்தம் செய் துள்ளதாக அவர் கூறினார்.

தமிழக அரசின் இலவச மடிக் கணினி வழங்கும் திட்டத் துக்குத் தேவையான லேப்டாப் களை வழங்கும் ஆர்டர் லெனோவா நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. இதன்படி 6.5 லட்சம் லேப்டாப்களை இந்நிறுவ னம் சப்ளை செய்ய உள்ளது.

நிறுவனத்தின் பர்சனல் கம்ப் யூட்டர் சந்தை அளவு 18 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். வளரும் நாடான இந்தி யாவில் கம்ப்யூட்டர் உபயோகம் 10 சதவீத அளவுக்கு உள்ள தாகக் குறிப்பிட்ட அவர் தென் அமெரிக்காவில் 18 சதவீத மாகவும், துருக்கியில் 49 சதவீத மாகவும், மலேசியாவில் 64 சதவீதமாக உள்ளதாகக் குறிப் பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in