Published : 03 Sep 2020 03:17 PM
Last Updated : 03 Sep 2020 03:17 PM

ஜிஎஸ்டி இழப்பீடு; 15-வது நிதி ஆணைய பொருளாதார ஆலோசனைக் குழு நாளை ஆலோசனை

15-வது நிதி ஆணையத்தின் பொருளாதார ஆலோசனைக் குழு நாளை கூடுகிறது.

15-வது நிதி ஆணையத்தின் தலைவர் என் கே சிங் மற்றும் உறுப்பினர்கள், ஆணையத்தின் பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் நாளை நாள் முழுவதும் கூட்டமொன்றை நடத்தவிருக்கிறார்கள்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் மீதான் இறுதி ஆலோசனை, மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் வரி நிலைமை, சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு, வருவாய்ப் பற்றக்குறை மானியம் மற்றும் நிதி ஒருங்கிணைப்பு" ஆகியவற்றை குறித்து இந்தக் கூட்டம் விவாதிக்க இருக்கிறது.

பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களான பினாகி சக்ரபொர்தி, பிரச்சி மிஸ்ரா, ஓம்கார் கோசுவாமி, சஜ்ஜித் செனாய், நீல்கந்த் மிஸ்ரா, ரத்தின் ராய், டி கே ஸ்ரீவத்ஸவா, அர்விந்த் விர்மானி, எம் கோவிந்த ராவ், சுதிப்தோ முண்ட்லே, சங்கர் ஆச்சார்யா, புரொனாப் சென், கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் ஆகியோர் நாளைய கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x