Published : 02 Sep 2020 12:40 PM
Last Updated : 02 Sep 2020 12:40 PM
2023-24க்குள் நிலக்கரி உற்பத்தியை 1 பில்லியன் டன்களாக உயர்த்த கோல் இந்தியா நிறுவனம் 500 திட்டங்களில் ரூ 1.22 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டை செய்ய உள்ளது என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
2023-24-க்குள் 1 பில்லியன் டன்கள் நிலக்கரி உற்பத்தியை எட்டவும், நிலக்கரியில் நாட்டை தற்சார்பாக்கவும், நிலக்கரி தோண்டியெடுப்பு, உள்கட்டமைப்பு, திட்ட மேம்பாடு, ஆய்வு மற்றும் தூய்மையான நிலக்கரி தொழில்நுட்பங்கள் தொடர்புடைய 500 திட்டங்களில் ரூ 1.22 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டை கோல் இந்தியா நிறுவனம் செய்ய உள்ளது.
இதனை அவர் பங்குதாரர்களுடனான காணொளி காட்சி மூலம் நடந்த கூட்டத்தில் இன்று தெரிவித்தார்.
"நிறுவனத்தின் விவகாரங்களில் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களையும் ஈடுபடுத்துவது திட்ட அபாயங்களைக் குறைத்து அவற்றை வெளிக்கொண்டு வரும். இத்தகைய இரு-வழி உரையாடல்கள் புதிய சிந்தனைகள், மேம்படுத்தப்பட வேண்டியப் பகுதிகள் மற்றும் திட்டம் சார்ந்த எதிர்பார்ப்புகளில் இரு தரப்புக்கும் நன்மை விளைவிக்கும்.
கோல் இந்தியாவில் உள்ள தொழில் வாய்ப்புகள் ஏராளமானது. அதன் 49 முதல் மைல் இணைப்பு திட்டங்களில், இரு கட்டங்களாக, 2023-24-க்குள் ரூ 14,200 கோடியை நிறுவனம் முதலீடு செய்யும்.
இவ்வாறு கூறினார் பிரகலாத் ஜோஷி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT