Published : 26 Aug 2020 08:19 PM
Last Updated : 26 Aug 2020 08:19 PM

தேசிய நெடுஞ்சாலைச் சுங்கச் சாவடி; சலுகைகளை பெறுவதற்கு பாஸ்டேக் கட்டாயம்

புதுடெல்லி

தேசிய நெடுஞ்சாலைச் சுங்கச் சாவடிகளில் அனைத்து சலுகைகளையும் பெறுவதற்கு FASTag கட்டாயமாக்கப்பட்டுள்ளது

சுங்கச் சாவடிகளில் ஒரே நாளில் திரும்பி வரும் போது கட்டணச் சலுகை பெறுதல் உள்ளிட்ட மற்ற சலுகைகளைப் பெறுவதற்கு, FASTag கட்டாயமாக்கப்படுவதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

24 மணி நேரத்துக்குள் திரும்பி வரக் கூடியவர்கள் அல்லது உள்ளூர்ப் பகுதிக்கான விலக்குகள் கோருபவர்கள், தங்கள் வாகனங்களில் செல்லத்தக்க FASTag ஸ்டிக்கர் ஒட்டியிருக்க வேண்டும் என்று இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் (கட்டண விகிதங்கள் நிர்ணயம் மற்றும் வசூலித்தல்) 2008 -இல் இதற்கான திருத்தம் செய்வதற்கு, 2020 ஆகஸ்ட் 24 ஆம் தேதியிட்ட அரசிதழ் அறிவிக்கை 534 E வெளியிடப் பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்கான மற்றொரு முயற்சியாக இது அமைந்துள்ளது. முன்னதாகவே பணம் செலுத்தி இருத்தல், ஸ்மார்ட் அட்டை அல்லது FASTag மூலம் அல்லது டிரான்ஸ்பான்டர் மூலம் அல்லது வேறு எந்த சாதனங்கள் மூலமாக மட்டுமே இந்தச் சலுகைகளைப் பெற முடியும்.

இந்த விதிகளின் திருத்தங்கள் காரணமாக பின்வரும் வகையில் அமல் செய்யப்படும் -

i. 24 மணி நேரத்துக்குள் திரும்பி வரும் போது FASTag அல்லது வேறு ஏதும் சாதன வசதி இருந்தால் தானியங்கி முறையில் சலுகை கிடைக்கும். பாஸ் தேவையில்லை.

ii. மற்ற அனைத்து சலுகைகளையும் பெறுவதற்கு, செல்லத்தக்க FASTag ஒட்டியிருப்பது கட்டாயம்

24 மணி நேரத்தில் திரும்பி வருபவர்கள், அதற்கு முன்கூட்டியே ரசீது பெற்றிருத்தல் அல்லது தகவல் தெரிவித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 24 மணி நேரத்துக்குள் திரும்பி வரும் வாகனத்தில் செல்லத்தக்க FASTag ஸ்டிக்கர் இருந்தால் தானாகவே சலுகைக் கட்டணம் கணக்கிடப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x