Published : 21 Aug 2020 07:07 PM
Last Updated : 21 Aug 2020 07:07 PM

கரீஃப் பருவ சாகுபடிப் பரப்பு சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 8.56 சதவீதம் அதிகம்

இன்றைய நிலவரப்படி மொத்தம் 1062.93 லட்சம் ஹெக்டர் பரப்பில் கரீஃப் பருவத்தில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது . இது சென்ற ஆண்டில் 979. 15 லட்சம் ஹெக்டர் ஆகும்.

நாட்டில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 8.56 லட்சம் ஹெக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கரீஃப் பருவ விதைப்புப் பரப்பு முன்னேற்ற விவரம் வருமாறு: அரிசி: சென்ற ஆண்டு இதே காலத்தில் 338.65 ஹெக்டர் என்ற நிலையில் இந்த ஆண்டு 378.32 லட்சம் ஹெக்டர் அதாவது 11.71 சதவீதம் கூடுதல்.

பயறு: சென்ற ஆண்டு இதே காலத்தில் 124.15 ஹெக்டர் என்ற நிலையில் இந்த ஆண்டு 132.56 லட்சம் ஹெக்டர் அதாவது 6.77 சதவீதம் கூடுதல். சிறுதானியம் : சென்ற ஆண்டு இதே காலத்தில் 166.80 ஹெக்டர் என்ற நிலையில் இந்த ஆண்டு 174.06 லட்சம் ஹெக்டர் அதாவது 4.35 சதவீதம் கூடுதல்

எண்ணெய் வித்துக்கள்: சென்ற ஆண்டு இதே காலத்தில் 167.53 ஹெக்டர் என்ற நிலையில் இந்த ஆண்டு 191.14 லட்சம் ஹெக்டர் அதாவது 14.09 சதவீதம் கூடுதல். கரும்பு : சென்ற ஆண்டு இதே காலத்தில் 51.62 ஹெக்டர் என்ற நிலையில் இந்த ஆண்டு 52.19 லட்சம் ஹெக்டர் அதாவது 1.10 சதவீதம் கூடுதல். பருத்தி: சென்ற ஆண்டு இதே காலத்தில் 123.54 ஹெக்டர் என்ற நிலையில் இந்த ஆண்டு 127.69 லட்சம் ஹெக்டர் அதாவது 3.36 சதவீதம் கூடுதல்.

சணல் மற்றும் புளிச்சக்கீரை: சென்ற ஆண்டு இதே காலத்தில் 6.86 ஹெக்டர் என்ற நிலையில் இந்த ஆண்டு 6.97 லட்சம் ஹெக்டர் அதாவது 1.68 சதவீதம் கூடுதல் நாளது தேதி வரையில் கரீஃப் பருவ விதைப்புப் பரப்பு முன்னேற்றத்தில் கோவிட்-19 காரணமாக எவ்விதத் தாக்கமும் இல்லை.

20.08.2020 தேதி நிலவரப்படி, நாட்டில் பெறப்பட்ட மழைப் பொழிவு 663.0 மில்லி மீட்டர் ஆகும். பருவத்தின் இயல்பான மழைப் பொழிவு 628.3 மில்லி மீட்டர் ஆகும் . இது 01.06.2020 முதல் 20.08.2020 வரையான காலத்தில் 6 சதவீதம் கூடுதல் ஆகும்.

மத்திய நீர் ஆணையத்தின் அறிக்கையின் படி, நாட்டின் 123 நீர்தேக்கங்களில் தற்போது நீர் இருப்பு நிலவரம் சென்ற ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 90 சதவீதம் ஆகும்: கடந்த பத்தாண்டு சராசரியைப் போல இது 107 சதவீதம் ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x