Published : 08 Sep 2015 09:53 AM
Last Updated : 08 Sep 2015 09:53 AM
தொழிலதிபர் அனில் அம்பானி யின் ரிலையன்ஸ் குழுமத்துடன் தோஹா வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது. வளைகுடா கூட்டுறவுக் கவுன்சில் நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள வர்த்தக வாய்ப்புகளுக்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கத்தாருக்கான இந்திய தூதர் சஞ்ஜீவ் அரோரா முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானியும், தோஹா வங்கி யின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சீதாராமனும் கையெழுத் திட்டனர்.
வளைகுடா கூட்டுறவு கவுன்சிலில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், ஒமான் ஆகிய நாடு கள் உறுப்பினர்களாக உள்ளன.
தோஹா வங்கியும், ரிலை யன்ஸ் குழுமமும் இந்த வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை ஆராய ஒப்பந்தம் வகை செய்வதாக தோஹா வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோஹா வங்கி நிதிச் சேவை மூலம் தொலைத் தொடர்பு, கட்டமைப்பு, பொழுதுபோக்கு, மின்னுற்பத்தி, மருத்துவ வசதி, பாதுகாப்பு சாதன உற்பத்தி ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரிலையன்ஸ் கேபிடல் ஈடுபட் டுள்ள சொத்து நிர்வாகம், ஆயுள் மற்றும் பொதுக் காப்பீடு விநியோகம் மற்றும் நிதிச் சேவையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளதாக தோஹா வங்கியின் சிஇஓ சீதாராமன் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் தோஹா வங்கியின் செயல்பாடு அதிகரிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.
மேலும் வங்கியின் உத்தி சார்ந்த நிதிச் சேவையை இப்பிராந்தி யத்தில் மேலும் வலுப்படுத்த இது வழிவகுக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT