Published : 02 Aug 2020 03:52 PM
Last Updated : 02 Aug 2020 03:52 PM
1.84 ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்புடன் ஆப்பிள் நிறுவனம் உலகிலேயே மதிப்பு மிக்க நிறுவனமாக முன்னிலை வகிக்கிறது.
இதன் மூலம் பெட்ரோலிய ஜெயண்ட் நிறுவனமான சவுதியின் ஆரம்கோ நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் பின்னுக்குத் தள்ளியது.
இதனையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் அன்று 10.47% அதிகரித்து பாசிட்டிவ் ஆக முடிந்துள்ளது. சவுதி ஆரம்கோ நிறுவனத்தின் மார்க்கெட் மதிப்பு 1.76 ட்ரில்லியன் டாலர்களாகும்.
மார்ச்சில் கரோனா காரணமாக பின்னடைவைச் சந்தித்த ஆப்பிள் தற்போது மீண்டது. இந்த ஆண்டு மட்டும் ஆப்பில் நிறுவனப் பங்குகள் விலை 44% அதிகரித்ததாக சிஎன்பிசி நியூஸ் தெரிவிக்கிறது.
வலுவான ஆன்லைன் வர்த்தகம் தான் இதன் மீட்சிக்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார நசிவு காலக்கட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்துக்கு இது பெரிய தூண்டுகோலாக, உத்வேகமாக அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT