Published : 28 Jul 2020 06:49 AM
Last Updated : 28 Jul 2020 06:49 AM
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உலகின் 2-வது பெரிய எரிசக்தி நிறுவனமாக உயர்ந்துள்ளது. சவுதி ஆராம்கோ நிறுவனத்துக்கு அடுத்த இடத்தை ரிலையன்ஸ் பிடித்துள்ளது.
இதுவரை இரண்டாமிடத்தில் இருந்த எக்ஸான்மொபில் கார்ப்பரேஷனின் சொத்து மதிப்பை விட ரிலையன்ஸ் சொத்து உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிறுவனத்தின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 800 கோடி டாலர் உயர்ந்து மொத்த மதிப்பு 18,900 கோடி டாலராக உயர்ந்துள்ளது. எக்ஸான்மொபில் கார்ப்பரேஷனின் மதிப்பு 100 கோடி டாலர் சரிந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு இந்த ஆண்டு 43 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததால் எக்ஸான் மொபில் நிறுவன பங்கு மதிப்பு 39 சதவீதம் சரிந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT