Published : 25 Jul 2020 04:05 PM
Last Updated : 25 Jul 2020 04:05 PM

டாடா கல்வி அறக்கட்டளை ரூ. 220 கோடி வருமான வரி விலக்கு:  மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு

டாடா கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளைக்கு 220 கோடி ரூபாய் வரி விலக்கு அளிக்க வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கமிஷனர் வருமான வரி (CIT) உத்தரவுக்கு எதிராக, செய்த மேல்முறையீட்டில் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் பெஞ்ச் பிபி பட், (ITAT) மற்றும் ITAT யின் தலைவர் அடங்கிய அமர்வு ஜூலை 24 அன்று தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பு டாடா கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளைக்கு ஒரு பெரிய நிவாரணமாக அமைந்தது. வருமான வரித்துறையால் 220 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி டாடா அறக்கட்டளைக்கு விதிக்கப்பட்டிருந்தது. இந்த விஷயத்தை கடந்த வெள்ளிக்கிழமை முடிவுக்கு கொண்டு வந்த, வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (ஐ.டி.ஏ.டி). மதிப்பீட்டாளருக்கு ஆதரவாக இந்த சிக்கலை நாங்கள் தீர்க்க முடிவு செய்துள்ளதால், இந்த முறையீட்டை அனுமதித்தோம், எனவே, மதிப்பீட்டாளரின் வேண்டுகோளை நாங்கள் ஆதரிக்கிறோம், இதன் விளைவாக விலக்கு கோரியதை அனுமதிக்காததை நாங்கள் நீக்குகிறோம், ”என்று கூறியது.

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT) டாடா கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளைக்கு 220 கோடி ரூபாய் வரி விலக்கு அளிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x