Published : 22 Jul 2020 07:04 AM
Last Updated : 22 Jul 2020 07:04 AM
காப்பீட்டு பாலிசிகளை விற்பனைசெய்வதற்காக, எல்ஐசி - யூனியன் வங்கி இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி, எல்ஐசி நிறுவனத்தின் பாலிசிகளை யூனியன் வங்கியின் தலைமையில் இணைந்துள்ள ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கியின் தமிழ்நாடு மற்றும்கேரள மாநிலங்களில் உள்ள 1,021 கிளைகள் மூலம் விற்பனை செய்யலாம். இதற்கான தொடக்க விழா, சென்னையில் உள்ள யூனியன் வங்கி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய யூனியன் வங்கியின் கள மண்டல மேலாளர் எம்.எச்.பத்மநாபம், “இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு சேவை புரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. எல்ஐசி பாலிசிகளில் அரசாங்க உத்தரவாதம் உள்ளதாலும், மக்களின் தேவைக்கு ஏற்ப திட்டங்கள் இருப்பதாலும் இம்முயற்சி வெற்றி பெறும்” என்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எல்ஐசி தென்மண்டல மேலாளர் கே.கதிரேசன், “ஆயுள்காப்பீடு, ஓய்வூதியம், குழந்தைகள் நலத் திட்டங்கள், பங்குச்சந்தை சார்ந்த பாலிசிகள் போன்றவாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ற பாலிசிகளை இந்தஒப்பந்தத்தின் மூலம் வங்கி விற்பனை செய்ய முடியும்” என்றார்.
யூனியன் வங்கி சென்னை வடக்கு பிராந்திய மேலாளர் பி.பி.தாஸ், தென் சென்னை துணை பொது மேலாளர் இ.புல்லாராவ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர் என எல்ஐசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT