Published : 08 Sep 2015 10:00 AM
Last Updated : 08 Sep 2015 10:00 AM

இவரைத் தெரியுமா?- அர்விந்த் சிங்கால்

இ-காமர்ஸ் தங்க நகை விற்பனை நிறுவனமான புளூஸ்டோன் டாட் காம் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி. இந்த மாதம் 5 ஆம் தேதியிலிருந்து இந்த பொறுப்புக்கு வந்துள்ளார். இதற்கு முன்பு

மொபைல் செயலி மூலம் இயங்கும் டாக்சி நிறுவனமான டாக்சி பார் ஷ்யூர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தார்.

இந்த நிறுவனத்தை ஓலா கேப்ஸ் வாங்கியபிறகு, ஜூலை மாதம் அந்நிறுவனத்திலிருந்து விலகினார்.

மெக்டொனால்டு இந்தியா நிறுவனத்தின் தெற்கு பிராந்திய இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

பல்வேறு துறைகளிலும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர். ஆசியன் பெயிண்ட்ஸ், மாரிகோ இண்டஸ்ட்ரீஸ், நோக்கியா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இ-காமர்ஸ் துறையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் மட்டுமே சேர வேண்டும் என நினைத்தேன். புளூஸ்டோன் நிறுவனம் வாடிக்கையாளர்களின் உணர்வுகளோடு நெருக்கமாக உள்ளாதால் இதில் சேர்ந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x