Published : 16 Sep 2015 10:10 AM
Last Updated : 16 Sep 2015 10:10 AM
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அந்நிய முதலீடு களை ஈர்ப்பதற்காக நான்கு நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் செல்ல திட்டமிட்டுள்ளார். வியாழக் கிழமை டெல்லியிலிருந்து புறப் படும் அவர் சிங்கப்பூர் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
இம்மாதம் 18-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கும் அவர் அங்கு சர்வதேச பொரு ளாதார சூழல், அதன் தாக்கம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகிய காரணங்களால் சர்வதேச அளவில் புதிய தொழில் களுக்கான வாய்ப்புகளும் அவசி யமும் ஏற்பட்டுள்ளது குறித்து உரையாற்ற உள்ளார்.
இந்த மாநாட்டில் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியமும் பங் கேற்க உள்ளார்.
சர்வதேச அளவில் நிலவும் ஸ்திரமற்ற பொருளாதார சூழலில் வளர்ச்சி வாய்ப்புகள் எனும் தலைப்பில் அவர் உரை நிகழ்த்த உள்ளார்.
இது தவிர கோல்ட்மென் சாக்ஸ் நிறுவனம் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச முதலீட் டாளர்கள் மாநாட்டில் ஜேட்லி கலந்து கொள்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT