Published : 30 Jun 2020 09:51 AM
Last Updated : 30 Jun 2020 09:51 AM

அன்ன யோஜனா திட்டம்: 101.90 லட்சம் மெட்ரிக் டன்கள் உணவு தானியம் விநியோகம்

கரோனா காலத்தில் சுயசார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தின்கீழ், 209.96 லட்சம் பயனாளிகளுக்கு 99,207 மெட்ரிக் டன் உணவு தானியங்களும், பிரதமரின் கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் 203.85 கோடி பயனாளிகளுக்கு 101.90 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளது

இந்திய உணவுக் கழகத்திடம் தற்போதைய நிலவரப்படி தற்போது 266.29 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும், 550.31 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் இருப்பில் உள்ளது. எனவே, மொத்தத்தில் 816.60 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானியங்கள் இருப்பில் உள்ளது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிற நலத் திட்டங்களின்கீழ் விநியோகிப்பதற்கு, மாதந்தோறும் 55 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானியங்கள் தேவைப்படும்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து, 138.43 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள், 4,944 ரயில் பெட்டிகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. இது தவிர, சாலை மற்றும் நீர்வழிப்பாதைகள் மூலமாகவும், உணவு தானியங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் 277.73 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானியங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

14 கப்பல்கள் மூலமாக 21,724 உணவுதானியங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் 13.47 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மத்திய அரசின் சுயசார்பு இந்தியா தொகுப்பின்கீழ், 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிக்கித்தவிப்போர் மற்றும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அல்லது மாநில அரசுகளின் பொதுவிநியோகத் திட்டத்தில் இடம்பெறாத, உணவு தானியங்கள் தேவைப்படும் குடும்பங்களுக்கு 8 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானியங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் மே மற்றும் ஜுன் மாதங்களில் தலா 5கிலோ வீதம் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் 6.39லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களைப் பெற்றுள்ளன. மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், மொத்தம் 209.96 லட்சம் (மே மாதத்தில் 120.08லட்சம், ஜுன் மாதத்தில் 89.88லட்சம்) பயணாளிகளுக்கு, 99,207 மெட்ரிக்டன் உணவு தானியங்களை விநியோகித்துள்ளன.

மேலும், 1.96 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக, 39,000 மெட்ரிக் டன் பருப்பு வகைகளை வழங்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிக்கித்தவிப்போர் மற்றும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அல்லது மாநில அரசுகளின் பொதுவினியோகத் திட்டத்தில் இடம்பெறாத, உணவு தானியங்கள் தேவைப்படும் குடும்பங்களுக்கு தலா 1கிலோ பருப்பு, மே மற்றும் ஜூன் மாதத்தில் இலவசமாக வழங்கப்படும்.

மாநிலங்களின் தேவைக்கேற்ப பருப்பு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, சுமார் 33,968 மெட்ரிக் டன் பருப்பு வகைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளால், 4,702 மெட்ரிக் டன் பருப்பு விநியோகிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், சுமார் ரூ.3,109 கோடி மதிப்பிலான உணவு தானியங்கள் மற்றும் ரூ.280 கோடி மதிப்பிலான பருப்பு வகைகளுக்கான 100 சதவீத நிதிச்சுமையையும் மத்திய அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

பிரதமரின் கரீப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான 3 மாதங்களுக்கு, மொத்தத்தில் 104.3லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 15.2 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை தேவைப்பட்ட நிலையில், 101.02 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும், 15.00லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2020-இல், 74.05 கோடி பயனாளிகளுக்கு, 37.02 லட்சம் மெட்ரிக் டன் (93%) உணவு தானியங்களும், மே 2020-ல் 72.99 கோடி பயனாளிகளுக்கு 36.49லட்சம் மெட்ரிக் டன்(91%) உணவு தானியங்களும், ஜுன் 2020-இல், 56.81கோடி பயனாளிகளுக்கு 28.41லட்சம் மெட்ரிக் டன்(71%) உணவு தானியங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், மொத்தம் ரூ.46,000 கோடி நிதிச்சுமையை மத்திய அரசே 100 சதவீதம்ஏற்றுக்கொண்டுள்ளது. பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், சண்டிகர், டெல்லி மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு கோதுமையும், எஞ்சிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களக்கு அரிசியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பருப்பு வகைகளைப் பொறுத்தவரை, மூன்று மாதங்களுக்கான மொத்தத் தேவை 5.87 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். இத்திட்டத்தின் கீழ் ஏற்படும் நிதிச்சுமையையான ரூ.5,000 கோடியை 100 சதவீதம் மத்திய அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. இதுவரை 5.79லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அதில் 5.58லட்சம் மெட்ரிக் டன் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்றடைந்துள்ளது, அதே வேளையில், 4.40லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மாநில/யூனியன் பிரதேச அரசுகளால் விநியோகிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், 18.6.2020 நிலவரப்படி, 8.76 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு (துவரம்பருப்பு – 3.77லட்சம் மெட்ரிக் டன், உளுத்தம்பருப்பு – 2.28லட்சம் மெட்ரிக் டன், சன்னா -1.30லட்சம் மெட்ரிக் டன் மற்றும் மசூர் பருப்பு - 0.27லட்சம் மெட்ரிக் டன்) கையிருப்பில் உள்ளது.

திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டம் :

திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ், அரிசிக்கு ரூ.22கிலோ மற்றும் கோதுமைக்கு ரூ.21கிலோ விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில், இத்திட்டத்தின்கீழ், இந்திய உணவுக் கழகம், 5.71 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 10.07லட்சம் மெட்ரிக் டன் அரிசியை விற்பனை செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x