Last Updated : 24 Jun, 2020 03:46 PM

 

Published : 24 Jun 2020 03:46 PM
Last Updated : 24 Jun 2020 03:46 PM

டெல்லியில் முதல்முறை: பெட்ரோலைவிட அதிகரித்த டீசல் விலை

டெல்லியில் இதுவரையில்லாத வகையில் முதல்முறையாக பெட்ரோல் விலையைவிட முதல்முறையாக டீசல் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து 18நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வந்ததையடுத்து, இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 7-ம் தேதியிலிருந்து தொடர்ந்து 18-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ.79.76 பைசாவாகவும், டீசல் லிட்டர் ரூ.79.88 பைசாவாகவும் அதிகரித்துள்ளது.

மற்ற நகரங்களான மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், கொல்கத்தா போன்றவற்றில் பெட்ரோல் விலைதான் அதிகமாக இருக்கும், டீசல் விலை அதைவிடக் சராசரியாக 5 ரூபாய் வரை குறைத்துதான் விற்கப்படும். ஆனால், டெல்லியில் மட்டும் பெட்ரோலைக் காட்டிலும் டீசல் விலை முதல்முறையாக உயர்ந்துள்ளது

இதற்கு கடந்த மாதம் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு வாட் வரியை உயர்த்தியதுதான் காரணமாகக் கூறப்படுகிறது.

வழக்கமாக பெட்ரோலுக்கும், டீசலுக்கும் இடையே விலை வேறுபாடு என்பது ரூ.18 முதல் 20ரூபாய் வரை இருந்து வந்தது, பெட்ரோலைவிட டீசலுக்கு வரியும் குறைவாக விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக டீசலுக்கு விதிக்கப்பட்ட அதிகமான வரியால் இரு எரிபொருளின் விலைக்கும் இடையிலான வேறுபாடு குறைந்துவிட்டது.

டெல்லி அரசு கடந்த மே 5-ம் தேதி டீசல் மீது வாட் வரியை 16.75 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்தியது, பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக அதிகரித்தது. இந்த வரி உயர்வு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்திய விலை உயர்வு போன்றவற்றால் டீசல் விலை உயர்ந்துள்ளது.

கடந்த 7-ம் தேதியிலிருந்து தொடர்ந்து 17 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்துள்ளன. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8.50 பைசா உயர்ந்துள்ளது, டீசல் ரூ.10.49 பைசா அதிகரித்துள்ளது

பெட்ரோல், டீசலில் ஏற்படும் இழப்பைச் சரி்க்கட்டும் வகையில் கடந்த 2002-ம் ஆண்டுக்குப்பின் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையின் விலை நிலவரத்துக்கு ஏற்பட 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை மாற்றிக்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது.

அந்த வகையில் இருவாரங்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்ட போது அதிகபட்சமாக ரூ.5 மேல் உயர்ந்ததில்லை. ஆனால், கடந்த 7-ம் தேதி முதல் 17 முறை விலை உயர்த்தப்பட்டதில் 10 ரூபாய்வரை டீசலும், ரூ.8.50 வரை பெட்ரோலும் விலைஅதிகரித்துவிட்டது.

அதன்பின் கடந்த –2017-ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றிக்கொள்ளவும் அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x