Last Updated : 08 Jun, 2020 10:45 AM

 

Published : 08 Jun 2020 10:45 AM
Last Updated : 08 Jun 2020 10:45 AM

83 நாட்களுக்குப்பின்: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 2-வது நாளாக அதிகரிப்பு

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

கடந்த 82 நாட்களுக்குப்பின் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்று லிட்டருக்கு 60 பைசா உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கடந்த 82 நாட்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் படுவீழ்ச்சி அடைந்தபோது பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும் இல்லை. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததும், தொடர்ந்து 2-வது நாளாக விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்துள்ளது.

இதன்படி டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.71.86 பைசாவிலிருந்து ரூ.72.46 பைசவாக அதிகரித்தது, டீசல் லிட்டர் ரூ.69.99 லிருந்து ரூ.70.59 பைசாவாக அதிகரித்தது.

கடந்த மார்ச் 16-ம் தேதிதான் கடைசியாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின் கரோனா வைரஸ் பரவல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி போன்றவற்றால் விலையில் எந்த மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.

நுகர்வோர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பலன்களையும் மே 6-ம் தேதி மத்திய அரசு கலால் வரியை பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியும், டீசலில் ரூ.13 உயர்த்தியும் எடுத்துக்கொண்டது.

தொடர்ந்து 2-வது நாளாக விலை உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசலில் லி்ட்டருக்கு இரு நாட்களில் ரூ.1.20 பைசா அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ரூ.76.67 ஆகவும், டீசல் ரூ.69.36 ஆகவும் விற்பனையாகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x