Published : 04 Jun 2020 10:05 PM
Last Updated : 04 Jun 2020 10:05 PM

வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பின்மை: மத்திய அரசு கணக்கெடுப்பு தொடக்கம் 

புதுடெல்லி

குறிப்பிட்ட இடைவெளியில் தொழிலாளர்கள் கிடைப்பதின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய புள்ளியல் அலுவலகம் (NSO) குறிப்பிட்ட கால தொழிலாளர் கணக்கெடுப்பை (PLFS) 2017 ஏப்ரலில் தொடங்கியது.

இந்தக் கணக்கெடுப்பின் நோக்கம் முக்கியமாக இரண்டடுக்கானது.நகரங்களுக்கு 3 மாத இடைவெளியில் உள்ள வார நிலவரத்தில், முக்கிய வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை அளவீடுகளை (அதாவது தொழிலாளர்கள் எண்ணிக்கை வீதம், தொழிலாளர்கள் பங்களிப்பு வீதம், வேலைவாய்ப்பின்மை வீதம்) மதிப்பிடுவதற்கு.

ஒவ்வொரு ஆண்டும் ஊரகம் மற்றும் நகரப்பகுதிகளில் வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மையின் வழக்கமான நிலவரம்(ps+ss) மற்றும் வார நிலவர (CWS) அளவீடுகளை மதிப்பிட

கிராமங்கள் மற்றும் நகரங்களில் வழக்கமான நிலை மற்றும் தற்போதைய வாரநிலை ஆகிய இரண்டிலும் வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை அளவீடுகளை உள்ளடக்கிய முதல் வருடாந்திர அறிக்கை (ஜூலை 2017 – ஜூன் 2018) 2019 மே மாதம் வெளியிடப்பட்டது. இது ஜூலை 2018- ஜூன் 2019 காலத்தில், குறிப்பிட்ட கால தொழிலாளர் கணக்கெடுப்பு அடிப்படையில் தேசிய புள்ளியியல் அலுவலகம் கொண்டு வரும் இரண்டாவது வருடாந்திர அறிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x