திருச்சியில் இருந்து சென்னை, பெங்களூருக்கு விமானப் போக்குவரத்து தொடக்கம்; வெளி மாநில பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்

திருச்சியில் இருந்து சென்னை, பெங்களூருக்கு விமானப் போக்குவரத்து தொடக்கம்; வெளி மாநில பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்
Updated on
1 min read

சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு முன்னணி தனியார் விமானம் 17 பயணிகளுடன் போக்குவரத்தை மீண்டும் தொடங்கியது. அந்த விமானம் 31 பயணிகளுடன் சென்னை திரும்பியது. திருச்சி-பெங்களூர் இடையே முதல் விமான சேவையும் மீண்டும் தொடங்கியது.

சென்னையிலிருந்து திருச்சிக்கு முன்னணி தனியார் விமானம் 17 பயணிகளுடன் போக்குவரத்தை மீண்டும் தொடங்கியது. அந்த விமானம் 31 பயணிகளுடன் சென்னை திரும்பியது. திருச்சி-பெங்களூர் இடையே முதல் விமான சேவையும் மீண்டும் தொடங்கியது. திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், கரூர் உட்பட 13 மாவட்டங்களைச் சேர்ந்த 65 பயணிகள் பெங்களூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் வந்தனர். அவர்கள் கோவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் தங்கள் சொந்த ஊர்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

விமான நிலையத்தில் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். திரும்பி சென்ற விமானத்தில் திருச்சியிலிருந்து 52 பேர் பெங்களூர் சென்றனர். விமானப் பயணிகள் தங்கள் போர்டிங் பாஸ்களை ஆன்லைன் மூலமாக விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு முதல் 1 மணி நேரம் முன்பு வரை பெற்றுக் கொள்ளும்படி பெரும்பாலான விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

ஆன்லைன் போர்டிங் பாஸ்களின் நகல்கள் அல்லது எலக்ட்ரானிக் நகல்கள் கொண்டுவரும்படியும், அவர்கள் பயணிகளை வலியுறுத்தியுள்ளனர். மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு விமானங்கள் மூலமோ அல்லது ரயில்கள் மூலமோ வர விரும்பும் பயணிகள் http://tnepass.tnega.org என்ற இணையதளத்தில் இ-பாஸ் பெற வேண்டும். அனைத்து பயணிகளுக்கும் வருகையின் போது, தனிமைப்படுத்துதல் முத்திரை குத்தப்பட்டு, 14 நாட்கள் வீட்டு தனிமை முறைகளை பின்பற்ற வேண்டும்.
அவர்கள் தமிழ்நாடு வர இ-பாஸ் பெற வேண்டும் மற்றும் அவர்களுக்கு கோவிட்-19 அறிகுறிகள் இருக்க கூடாது.

திருச்சியில் இடைவெளியில் பயணிகள் நிற்கின்றனர்
திருச்சியில் இடைவெளியில் பயணிகள் நிற்கின்றனர்

உடல்நிலை சரியில்லாமல் தனியாக இருக்கும் பெற்றோர்களைப் பார்க்கவும், மருத்துவ சிகிச்சைக்காகவும், அவசர பயணம் செய்ய விரும்புபவர்களுக்கும், உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது உதவும். ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்துகள் இன்னும் முழு அளவில் தொடங்காத நிலையில், உள்நாட்டு விமானப் போக்குவரத்து உண்மையிலேயே உதவும். ஆனால், கோவிட்-19 பரவலை தடுக்க அரசு வழங்கியுள்ள விதிமுறைகள் மற்றும் சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in