Published : 23 May 2020 06:48 AM
Last Updated : 23 May 2020 06:48 AM
அமேசான் நிறுவனம் உலகின்முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமாக உள்ளது. தற்போது அதன்ஃபுல்ஃபில்மென்ட் மற்றும் டெலிவரி உள்ளிட்ட பிரிவுகளில் பணிபுரிய ஆட்கள் அதிகம் தேவையாக உள்ளனர். ஏறக்குறைய 50 ஆயிரம் பேர் தேவையாக இருப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது.
மேலும் அமேசான் ஃப்ளெக்ஸ் என்ற திட்டத்தின் மூலம், பகுதி நேரமாகவும் பணிபுரியும் வகையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த அமேசான் ஃப்ளெக்ஸில் இணைந்து கொண்டால் அவரவர் விருப்பபணி நேரத்தை அவரவரே தேர்ந்தெடுக்கலாம்.
கரோனா வைரஸ் பயத்தால்மக்கள் வெளியில் வர தயங்குகின்றனர். மேலும் மால்கள்மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆன்லைன் வர்த்தக சேவையின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, மக்களின்தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ள ஆன்லைன் வர்த்தக சேவைகள் காலத்தின் கட்டாயம். தேவையான அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் அமேசான் இந்தச் சேவையைச் செய்யும் என்று அதன் ஃபுல்ஃபில்மென்ட் பிரிவின் துணைத் தலைவர் அகில் சக்சேனா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT