Published : 11 Aug 2015 10:58 AM
Last Updated : 11 Aug 2015 10:58 AM
இந்தியப் பங்குச் சந்தைகள் வாரத்தின் தொடக்க நாளான நேற்று சரிவான வர்த்தகத்தைச் சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 134 புள்ளிகள் சரிந்து 28101 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்துள்ளது. தேசியப் பங்குச் சந்தையான குறியீடான நிப்டி 39 புள்ளிகள் சரிந்து 8525 புள்ளிகள் முடிந்துள்ளது.
நேற்றைய பங்கு வர்த்தகத்தில் உள்கட்டமைப்பு மற்றும் உலோகத்துறை நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.
முக்கிய நிறுவனங்களான ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ் மற்றும் ஐடிசி நிறுவன ங்களின் பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. வர்த்த கத்தின் கடைசி அரைமணி நேரத்தில் சந்தை கடுமை யான இறக்கத்தைக் கண்டன.
பொருட்கள் மற்றும் சேவை கள் வரி சட்டத்தை இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற முடியாத நிலைமையில், அடுத்த பருவ காலத்தில் சட்டத்தை அமல்படுத்த முடியாத சூழல் ஏற்படும் என நிதியமைச்சக மூத்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதுபோல நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவில் சில திருத்தங்கள் மேற்கொள்ள உள்ளதும் உள்நாட்டு முதலீட்டாளர்களை யோசிக்க வைத்துள்ளது என்று சந்தை நோக்கர்கள் குறிப்பிட்டனர். மும்பை பங்குச் சந்தையின் அனைத்து துறை குறியீடுகளும் வர்த்தக முடிவில் சரிவைக் கண்டன.
நேற்றைய வர்த்தகத்தில் ஏற்றம் கண்ட பங்குகள் பிஹெச்இஎல் 2.37% , ஹீரோ மோட்டோ கார்ப் 1.58%, மாருதி சுஸூகி 0.99 சதவீதம் ஏற்றத்தைக் கண்டன. ஓஎன்ஜிசி 2.76%, எம் அண்ட் எம் 2.20%, டாடா மோட்டார்ஸ், 1.96%, என்டிபிசி 1.87%, ஐடியா செல்லுலார் 1.83% பங்குகள் இறக்கத்தைக் கண்டன.
நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை அதிக பட்சமாக 28417 புள்ளிகள் வரை வர்த்தகம் ஆனது. குறைந்த பட்சமாக 28017 புள்ளிகள் வரை வர்த்தகம் கண்டது. நிப்டியின் 50 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்தையும் 34 பங்குகள் நஷ்டத்தையும் கண்டிருந்தன.
கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அந்நிய போர்ட் போலியோ முதலீட்டாளர்கள் 93.74 கோடி மதிப்பிலான பங்கு களை விற்பனை செய்துள்ளனர்.
உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 34.08 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT