Last Updated : 15 May, 2020 01:32 PM

 

Published : 15 May 2020 01:32 PM
Last Updated : 15 May 2020 01:32 PM

கோவிட்-19 தாக்கம்: உலக பொருளாதாரம் 8.8 ட்ரில்லியன் டாலர்கள் இழப்பைச் சந்திக்கும், சீனாவுக்கும் பேரிழப்பு

உலகத்தை உலுக்கி வரும் கரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகப் பொருளாதாரம் 5.8-8.8 ட்ரில்லியன் டாலர்கள் இழப்பைச் சந்திக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி எச்சரித்துள்ளது.

இதில் தெற்காசிய மொத்த உற்பத்தி மீதான கரோனாவின் தாக்கம் 142-218 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இருக்கும்.

இது தொடர்பாக ஆசிய வளர்ச்சி வங்கி கூறியிருப்பதாவது:

உலகப்பொருளாதாரம் 5.8 முதல் 8.8 ட்ரில்லியன் டாலர்கள் வரை பாதிக்கப்படும். அதாவது உலக ஒட்டுமொத்த உற்பத்தியில் 6.4% முதல் 9.7% வரையில் இழக்கப்படும்.

தெற்காசியாவில் ஒட்டுமொத்த உற்பத்தி 3.9% முதல் 6% வரை குறையும். பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருக்கும் இறுக்கமான கட்டுப்பாடுகளினால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி பெரிய அளவில் அடிவாங்கும்.

ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் குறைந்த அளவு நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் 3 மாதங்கள் என்று இருந்தால் 1.7 ட்ரில்லியன் டாலர்கள் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும், இதே நோய்க்காட்டுப்பாட்டு நடவடிக்கைகள் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டால் இப்பகுதியின் பொருளாதார இழப்பு 2.5 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கும். உலகம் முழுதுமான உற்பத்தி சரிவில் இது 30% ஆக இருக்கும்.

சீனாவுக்கு நஷ்டம் 1.1 ட்ரில்லியன் டாலர்கள் முதல் 1.6 ட்ரில்லியன் டாலர்கள் வரை இருக்கும்.

உலக அளவில் தொழிலாளர்கள் வருவாய் 1.2 ட்ரில்லியன் டாலர்கள் முதல் 1.8 ட்ரில்லியன் டாலர்கள் வரை சரிவு காணும். ஆசியாவைப் பொறுத்தமட்டில் கூலி வருவாய் 359 பில்லியன் டாலர்களிலிருந்து 550 பில்லியன் டாலர்கள் வரை சரிவு காணும்.

இவ்வாறு ஆசிய வளர்ச்சி வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x