Published : 01 Aug 2015 10:17 AM
Last Updated : 01 Aug 2015 10:17 AM
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஹாங்காங் கிளைக்கு 10 லட்சம் டாலர் அபராதத்தை ஹாங்காங் மத்திய வங்கி விதித்திருக்கிறது. சட்ட விரோத பண பரிவர்த்தனை நட வடிக்கையில் ஈடுபட்டதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சட்டம் 2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை இதுவாகும்.
2012 ஏப்ரல் முதல் 2013 நவம்பர் வரை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஹாங்காங் கிளை காசோலைகளைக் கையா ளும்போது ஹாங்காங் சட்ட விதி முறைகளை பின்பற்றவில்லை.
இதில் 28 கார்ப்பரேட் வாடிக்கை யாளர்களின் காசோலைகளும் அடங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT