Published : 29 Mar 2020 06:39 PM
Last Updated : 29 Mar 2020 06:39 PM

கரோனா தடுப்பு: பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 100 கோடி; அதானி குழுமம் அறிவிப்பு

கெளதம் அதானி- கோப்புப் படம்

புதுடெல்லி

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவுவதற்காக பிரதமர் நிவாரண நிதிக்கு அதானி குழுமத்தின் சார்பில் முதல்கட்டமாக 100 கோடி ரூபாய் வழங்கப்படும் அதன் தலைவர் கெளதம் அதானி அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடக்கவில்லை.

இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக ட்வீட் செய்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அறிவித்த வங்கிக் கணக்கிற்குப் பலரும் நிதியுதவி அளிக்கத் தொடங்கினர். பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் என உதவிகள் செய்யத் தொடங்கியுள்ளனர்.

அந்தவகையில் அதானி குழுமத்தின் சார்பில் முதல்கட்டமாக 100 கோடி ரூபாய் வழங்கப்படும் அதன் தலைவர் கெளதம் அதானி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவும் எதிர்த்து போராடி வருகிறது.

இந்த போராட்டத்தில் நாட்டிற்கு முழு வெற்றி கிடைக்கும். பிரதமர் மோடியின் முயற்சிக்கு எங்கள் நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளிக்கும். பிரதமர் நிதிக்கு முதல்கட்டமாக 100 கோடி ரூபாய் வழங்குவோம். கூடுதலாக அரசின் திட்டங்கள் மற்றும் தேவையை பொறுத்து மீண்டும் நிதி வழங்க தயாராக உள்ளோம். அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவை ஒழிப்போம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x