Published : 29 Mar 2020 04:02 PM
Last Updated : 29 Mar 2020 04:02 PM

கரோனா நிவாரண நிதி: தொழிலதிபர் உதய் கோட்டக் ரூ.50 கோடி நிதியுதவி

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவுவதற்காக நிவாரணத் தொகை அளிக்கலாம் என்று பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து கோட்டக் மகேந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் உதய் கோட்டக் தனிப்பட்ட முறையில் 50 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடக்கவில்லை.

இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக ட்வீட் செய்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அறிவித்த வங்கிக் கணக்கிற்குப் பலரும் நிதியுதவி அளிக்கத் தொடங்கினர். பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் என உதவிகள் செய்யத் தொடங்கியுள்ளனர்.

அந்தவகையில் கோட்டக் மகேந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் உதய் கோட்டக் 50 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். தனிப்பட்டமுறையில் இந்த தொகையை வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார். .

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x