Published : 24 Mar 2020 09:40 AM
Last Updated : 24 Mar 2020 09:40 AM

பணப்புழக்கத்தை அதிகரிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ரூ.1 லட்சம் கோடி நிதி

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மொத்த நாடும் முடங்கிஉள்ள நிலையில் வங்கித் துறையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

குறைந்த ரெப்போ விகிதத்தில் வங்கிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏலம் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை நடத்த திட்டமிடப்பட்டது. நேற்று திங்கள் கிழமை ரூ.50 ஆயிரம் கோடிக்கான ஏலம் நடத்தப்பட்டது. இன்று செவ்வாய் கிழமை மீதமுள்ள ரூ.50 ஆயிரம் கோடிக்கான ஏலம் நடத்தப்படும். மேலும் தேவைப்பட்டால் கூடுதலாக நிதி வழங்கவும் தயாராக உள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பு தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக நெருக்கடி நிலை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. இது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்தகைய சூழலில் பணப் புழக்கத்தை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கையை ரிசர்வ்வங்கி எடுத்துள்ளது. வங்கிகள்இந்த நிதியை கடன் வழங்கு வதற்குப் பயன்படுத்தும். இதன் மூலம் பொருளாதாரத்தில் பணப் புழக்கம் ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x