Published : 23 Mar 2020 03:47 PM
Last Updated : 23 Mar 2020 03:47 PM

பங்குச்சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சி: கரோனா பரவல் எதிரொலி

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் எனப்படும் கரோனா வைரஸ் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 பரவியுள்ளது.

அமெரிக்காவிலும் கரோனா வைரஸ் உயிர்ப்பலியை வாங்கியுள்ளது. கரோனாவைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி மக்களின் அன்றாட செயல்பாடுகள் முடங்கி பெரும் தொழில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.

இந்தநிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன.

மும்பை பங்குசந்தையில் சென்செக்ஸ் நண்பகல் நிலவரப்படி 3900 புள்ளிகள்களுக்கும் அதிகமாக சரிந்தது.

சென்செக்ஸ் 3994 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 25981 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் தேசியப் பங்குச்சந்தையில் நிப்டியில் 1108 புள்ளிகள் சரிவடைந்து 7636 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x