Published : 22 Mar 2020 09:56 AM
Last Updated : 22 Mar 2020 09:56 AM
இந்தியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களின் விசாவின் காலக்கெடுவை ஏப்ரல் 15 வரைநீட்டிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. வழக்கமான விசா மற்றும் இ விசாவில்தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களின் காலக்கெடு தற்போதுமுடிந்திருந்தாலும் அல்லது முடியும் தறுவாயில் இருந்தாலும் அவர்கள் ஏப்ரல் 15 வரை இந்தியாவில் தங்கிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது கரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் விமான சேவை பரவலான அளவில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்வதற்கும், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கும் கடும் நெருக்கடி உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் மார்ச் 13-க்குப்பிறகு விசா முடியும் வெளிநாட்டவர்கள் ஏப்ரல் 15 வரையில் இந்தியாவில் இருப்பதற்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த கால இடைவெளியில் அவர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற விரும்பினாலும், அவர்களுக்கு விசாமுடிந்தற்கான அபராதம் விதிக்கப்படாது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT