Published : 20 Mar 2020 07:50 AM
Last Updated : 20 Mar 2020 07:50 AM
கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (செபி), நிறுவனங்கள் நடப்பு நிதி ஆண்டின் நான்காம் காலாண்டு காலாண்டு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு கூடுதலாக 45 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது. தவிர, முழு ஆண்டு அறிக்கையை சமர்பிக்க கூடுதலாக 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 31-ம் தேதியுடன் நடப்பு நிதி ஆண்டின் நான்காம் காலாண்டு முடிகிறது. நிறுவனங்கள் அதன் காலாண்டு நிதிநிலை அறிக்கையை அந்த காலாண்டு முடிந்து 45 தினங்களுக்குள் வெளிட வேண்டும். அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டுக்கான நான்காம் காலாண்டு அறிக்கையை மே 15-க்குள் வெளியிட வேண்டும். ஆனால் தற்போது கரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. மக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிறுவனங்கள் அதன் அறிக்கையை வெளியிடுவதற்கு கூடுதல் கால அவகாசத்தை செபி வழங்கியுள்ளது. அதன்படி, நிறுவனங்கள் அதன் நான்காம் காலாண்டு அறிக்கையை ஜூன் 30-க்குள் சமர்ப்பித்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT