Published : 18 Mar 2020 07:03 PM
Last Updated : 18 Mar 2020 07:03 PM

முழு செயல்பாட்டுக்கு வந்தது யெஸ் வங்கி; கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்

யெஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளும் வழங்கப்படும் வழங்கப்பட்டன.

யெஸ் வங்கியின் நிதிநிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி மார்ச் 5-ம் தேதி யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஏப்ரல்-3 வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களது வைப்புத் தொகையில் ரூ.50,000-க்குமேல் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப் பட்டது. யெஸ் வங்கியின் கடன் வழங்கும் செயல்பாடும் முடக்கப்பட்டது.

வங்கியின் இயக்குநர்கள் குழுவை கலைத்துவிட்டு, எஸ்பிஐ-யின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமாரை தனது பிரதிநிதியாக ரிசர்வ் வங்கி நியமித்தது.

யெஸ் வங்கியின் மீதான கட்டுப்பாடு வரும் மார்ச் 18-ம் தேதி விலக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி இன்று மாலை 6 மணி முதல் யெஸ் வங்கி முழு அளவில் செயல்படத் தொடங்கியது.

ரத்து செய்யப்பட்ட அனைத்து சேவைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன. வங்கியின் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் சேவை உட்பட யெஸ் வங்கியின் அனைத்து சேவைகளையும் மீண்டும் வழங்கியுள்ளதாக யெஸ் வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x