

யெஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளும் வழங்கப்படும் வழங்கப்பட்டன.
யெஸ் வங்கியின் நிதிநிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி மார்ச் 5-ம் தேதி யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஏப்ரல்-3 வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களது வைப்புத் தொகையில் ரூ.50,000-க்குமேல் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப் பட்டது. யெஸ் வங்கியின் கடன் வழங்கும் செயல்பாடும் முடக்கப்பட்டது.
வங்கியின் இயக்குநர்கள் குழுவை கலைத்துவிட்டு, எஸ்பிஐ-யின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமாரை தனது பிரதிநிதியாக ரிசர்வ் வங்கி நியமித்தது.
யெஸ் வங்கியின் மீதான கட்டுப்பாடு வரும் மார்ச் 18-ம் தேதி விலக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி இன்று மாலை 6 மணி முதல் யெஸ் வங்கி முழு அளவில் செயல்படத் தொடங்கியது.
ரத்து செய்யப்பட்ட அனைத்து சேவைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன. வங்கியின் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் சேவை உட்பட யெஸ் வங்கியின் அனைத்து சேவைகளையும் மீண்டும் வழங்கியுள்ளதாக யெஸ் வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.