Published : 24 Feb 2020 04:20 PM
Last Updated : 24 Feb 2020 04:20 PM

தங்கம் விலை இதுவரை இல்லாத உச்சம்: இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை இன்று காலை உயர்ந்த நிலையில் இன்று மாலை மீண்டும் உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், இந்தியாவில் தொழில்துறை தேக்கம் போன்ற காரணங்களால் கடந்த 3 மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இருப்பினும் பின்னர் சற்று நிலைமை சீரடைந்து வந்தது. இந்தநிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது.

உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸ் பாதிப்பால் சீன மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி - இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் சுழற்சியும் தேக்கமடைந்துள்ளது.

இதனால் உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றன. பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.

இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது கிராம் 4 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாகவும், பவுன் 32 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாகவும் உயர்ந்தது.

இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று காலை மீண்டும் உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.4100-க்கு விற்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று மாலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.

சென்னையில் 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் நேற்றைய விலையை ஒப்பிடுகையில் 94 ரூபாய் உயர்ந்து ரூ. 4166 -க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ.752 உயர்ந்து ரூ.33328 -க்கு விற்கப்படுகிறது.

24 காரட் சுத்த தங்கம் 8 கிராம் ரூ. 34992-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை சிறிது குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 90 காசுகள் குறைந்து ரூ. 53.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x