Published : 20 Feb 2020 08:18 AM
Last Updated : 20 Feb 2020 08:18 AM
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணப் புழக்கம் கடுமையாகக் குறைந்துள்ள நிலையில், இந்திய நிதி நிறுவனங்கள் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று பொருளாதார ஆய்வு நிறுவனம் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பண நெருக்கடி, சிறுகுறு நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சூழலால் நிதிநிறுவனங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. தற்போதையை பொருளாதாரச் சூழலில் நிதி நிறுவனங்கள் முன்னால் பெரும் சவால்கள் இருப்பதாக ஃபிட்ச் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் கடும் சரிவில் உள்ளது. மக்களின் நுகர்வு திறன் குறைந்திருப்பதும், வங்கிசாரா நிதி நிறுவனங்களிடம் பணப்புழக்கம் குறைந்திருப்பதுமே தற்போதைய பொருளாதாரச் சரிவுக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது நிதி நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. அந்த நெருக்கடி நிலை மேலும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 4.6 சதவீதமாகக் குறையும் என்றும் ஃபிட்ச் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT