

பூஷன் பவர் நிறுவனத்தை வாங்கஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் நிறுவனத்துக்கு தேசிய நிறுவனங்கள்சட்ட மேல் முறையீட்டு தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.
கடன் சுமையால் திவாலான பூஷன் பவர் மற்றும் ஸ்டீல் நிறுவனத்தை ரூ.19,700 கோடிக்கு வாங்க ஜே எஸ் டபிள்யு விருப்பம் காட்டியது. ஆனால், அமலாக்கத் துறை பூஷன் பவர் நிறுவனத்தின் சொத்துகளை அவ்வபோது கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுவந்தது.
இந்த நடவடிக்கையை எதிர்த்துஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் என்சிஎல்ஏடியிடம் முறையிட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பூஷன் பவர் மற்றும் ஸ்டீல் நிறுவனத்தின் முன்னாள் புரோமோட்டர்கள் பொறுப்பேற்க வேண்டிய நிதி முறைகேடுகளுக்கு ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் நிறுவனம் பாதிக்கக்கூடாது. எனவே திவால் சட்ட நடைமுறை காலத்தில் பூஷன் பவர் நிறுவனம் ஈட்டும் எபிட்டா வருமானம் ஜேஎஸ்டபிள்யு நிறுவனத்துக்குச் சேர வேண்டும்.
மேலும் திவால் நடைமுறைகள் எடுக்கப்பட்டுவருவதால் அமலாக்கத் துறை பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பூஷன் பவர் சொத்துகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை எடுக்காமல் இருக்க வேண்டும் என்று கூறினர்.