Published : 11 Jan 2020 09:53 AM
Last Updated : 11 Jan 2020 09:53 AM

மும்பை பங்குச் சந்தையில் இரண்டாவது நாளாக ஏற்றம்

மும்பை

ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் தணிந்துள்ள நிலையில், மும்பை பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டுள்ளது.

நேற்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையில் 147 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 41,599-ஐ தொட்டது. அதேபோல், வர்த்தக முடிவில் தேசியப்பங்குச் சந்தையில் 40.90 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டு எண் 12,256.80-ஐ தொட்டது.

மொத்த வர்த்தகமாக மும்பை பங்குச் சந்தை 0.36 சதவீத அளவிலும், தேசியப் பங்குச் சந்தை 0.33 சதவீதம் அளவிலும் ஏற்றம் கண்டன. வங்கி கள், ஐடி நிறுவனங்களின் பங்கு கள் நல்ல ஏற்றம் கண்டன. வர்த் தக நேரத்தில், மும்பை பங்குச் சந்தையில் அதிகபட்ச அளவாக 309 புள்ளிகள் வரை உயர்ந்தது.

அதேபோல், தேசியப் பங்குச் சந்தையில் 86 புள்ளிகள் வரை உயர்ந்து முதன் முறையாக குறி யீட்டு எண் 12,300-ஐ தொட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x