

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மாற்றம், பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இதனிடையே அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதனால், பங்குச் சந்தை, தொழில் துறை போன்றவற்றை தவிர்த்துவிட்டு, தங்கத்தில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். மற்றொருபுறம் உலக அளவிலும், உள்ளூரிலும் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளதால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
எனினும் தங்கம் விலை நேற்று சற்று குறைந்து இருந்தது. இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி, 22காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒருகிராம் ரூ. 66 உயர்ந்து ரூ.3929க்கும், பவுன் ரூ.528 ரூபாய் குறைந்து ரூ.31432க்கும் விற்பனையாகிறது.
சுத்த தங்கமான 24 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.33,000 க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.1.40 காசுகள் குறைந்து ரூ.52.60க்கு விற்பனையாகிறது.