

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மாற்றம், பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. உலக அளவில் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இரு நாடுகளில் ஏற்படும் சாதக, பாதக சூழல்கள், பொருளாதார நெருக்கடி போன்றவையே உலக அளவில் தங்கம் விலையை நிர்ணயிக்கின்றன.
அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதனால், பங்குச் சந்தை, தொழில் துறை போன்றவற்றை தவிர்த்துவிட்டு, தங்கத்தில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். மற்றொருபுறம் உலக அளவிலும், உள்ளூரிலும் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளதால், தங்கம் விலையில் திடீர் உயர்வு காணப்பட்டது.
தங்கம் விலை கடந்த 10 நாட்களாகவே உயர்ந்த வண்ணம் இருந்தது. நேறறு கடுமையாக உயர்ந்து, புதிய உச்சமாக சவரன் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது.
இந்தநிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் - வெள்ளி சந்தையில் காலை நிலவரப்படி, 22காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒருகிராம் ரூ. 53 குறைந்து ரூ.3843க்கும், பவுன் ரூ.424 ரூபாய் குறைந்து ரூ.30744க்கும் விற்பனையாகிறது.
சுத்த தங்கமான 24 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.32304க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.1.20 காசுகள் குறைந்து ரூ.51.00க்கு விற்பனையாகிறது.