Published : 28 Dec 2019 09:30 AM
Last Updated : 28 Dec 2019 09:30 AM

மூன்று நாட்கள் சரிவைக் கண்ட நிலையில் மும்பை பங்குச் சந்தையில் 400 புள்ளிகள் உயர்வு

மும்பை

நேற்றைய வர்த்தக முடிவில் பங்குச் சந்தைப் புள்ளிகள் 1 சதவீதம் அளவில் ஏற்றம் கண்டன. மும்பை பங்குச் சந்தையில் 411 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டென் 41,575.14-ஐ தொட்டது. இது 1 சதவீத உயர்வு ஆகும். அதேபோல் தேசிய பங்குச் சந்தையும் ஏற்றம் கண்டது. வர்த்தக முடிவில் தேசிய பங்குச் சந்தையில் 119 புள்ளிகள் உயர்ந்தன. இந்நிலையில் அதன் குறியீட்டென் 12,245.80-ஐ தொட்டது. இதுவும் 1 சதவீத உயர்வு ஆகும்.

கடந்த மூன்று நாட்களாக பங்குச் சந்தையில் வீழ்ச்சி காணப்பட்டது. இந்நிலையில் ஆண்டு இறுதி நெருங்கியுள்ள நிலையில் நேற்று ஏற்றம் கண்டது.

அலாகாபாத் வங்கியின் பங்கு மதிப்பு 8.45 சதவீதம் உயர்ந்தது. ஆக்ஸிஸ் வங்கியின் பங்குகள் 3.33 % , எஸ்பிஐ 2.24%, ஐசிஐசிஐ வங்கி 1.93% அளவிலும் ஏற்றம் கண்டன.

பவர்கிரிட், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், எல் அண்ட் டி, பஜாஜ் பைனான்ஸ், மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் எழுச்சி கண்டன. டைட்டன், கோடக் வங்கி ஆகியவற்றின் பங்குகள் சரிந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x