Published : 06 Aug 2015 09:59 AM
Last Updated : 06 Aug 2015 09:59 AM

ரூ.315 கோடி நிதி திரட்டும் யெஸ் வங்கி

யெஸ் வங்கி கிரீன் இன்பி ராஸ்ட்ரக்சர் கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ. 315 கோடி நிதி திரட்ட உள்ளது. இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள யெஸ் வங்கி தனியார் நிறுவன ஒதுக்கீடு மூலம் இந்த நிதியை திரட்ட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. உலக வங்கி குழுமத்தைச் சேர்ந்த இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திட மிருந்து இந்த பாண்டுகள் மூலம் நிதி திரட்டுகிறது.

இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் வளர்ந்து வரும் சந்தையான கிரீன் பாண்டுகளில் முதலீடு செய்வது இதுதான் முதல் முறை என்று வங்கி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த பாண்டுகள் 10 ஆண்டு கள் நிலைத்த தன்மை கொண் டவை. இந்த பாண்டுகள் மூலம் திரட்டும் தொகையைக் கொண்டு வங்கி கிரீன் கட்டமைப்பு திட்டங் களுக்கு முக்கியமாக சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்ற திட்டங் களுக்கு கடன் வழங்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x