Published : 09 Dec 2019 11:22 AM
Last Updated : 09 Dec 2019 11:22 AM

வெளிநாடுகளில் இருந்து இந்திய நிறுவனங்கள் 3.41 பில்லியன் டாலர் கடன்

கோப்புப்படம்

புதுடெல்லி

இந்திய நிறுவனங்கள் அக்டோபர் மாதத்தில் 3.41 பில்லியன் டாலர் அளவில் வெளிநாடுகளிலிருந்து கடன் வாங்கியுள்ளன. இது சென்ற ஆண்டைவிட இருமடங்கு அதிகம் ஆகும். சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் 1.41 பில்லியன் டாலர் வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்றன.

தற்போது வாங்கியுள்ள கடன் களில், 2.87 பில்லியன் டாலரை தானி யங்கி இசிபி வழியாகவும், 538 மில்லியன் டாலரை ஒப்புதல் முறை இசிபி வழியாகவும் வாங்கி உள்ளன. முத்தூட் பைனாஸ் (400 மில்லியன் டாலர்), ஹெச்பிசிஎல் மிட்டல் எனர்ஜி (300 மில்லியன் டாலர்), வர்தா சோலார் (251 மில்லியன் டாலர்), எல் அண்ட் டி (200 மில்லியன் டாலர்), டெக் கான் ஃபைன் கெமிக்கல் (140 மில்லி யன் டாலர்), ஆதித்யா பிர்லா பை னான்ஸ் (75 மில்லியன் டாலர்) ஆகிய நிறுவனங்கள் தானியங்கி இசிபி வழியே கடன் வாங்கி உள்ளன.

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் (400 மில்லியன் டாலர்), ராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் (138 மில்லியன் டாலர்) உள்ளிட்ட நிறுவனங்கள் ஒப்புதல் முறை இசிபி வழியே கடன் வாங்கி உள் ளன. இந்த அக்டோபர் மாதத்தி லும், சென்ற ஆண்டிலும் ரூபாயை அடிப்படையாகக் கொண்ட கடன் பத்திரங்கள் வழியே எந்தக் கடன்களும் வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x