Published : 29 Nov 2019 10:06 AM
Last Updated : 29 Nov 2019 10:06 AM

தற்போதைய பொருளாதார மந்தநிலையால் அரசின் கடன் சுமை அதிகரிக்கும்: மூடி’ஸ் தகவல்

புதுடெல்லி

வரி வருவாய் குறைந்துள்ளதால் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 3.7 சதவீதமாக உயரும். இதன் விளைவாக அரசின் கடன் சுமை அதி கரிக்கும் என்று பொருளாதார ஆய்வு நிறுவனம் மூடி’ஸ் தெரிவித்து உள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை 3.3 சதவீதமாக கட்டுக்குள் வைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால் தற்போதையை பொருளா தார நிலையில் அதற்கான சாத்தியங் கள் மிகக் குறைவு என்று அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

ஒருபுறம் வளர்ச்சி குறைந்து வருகிறது; மறுபுறம் உட் கட்டமைப்பை மேம்படுத்த செலவிட வேண்டிய கட்டாயத்தில் அரசு உள் ளது. இதனால் நிதிப் பற்றாக்குறை அளவை கட்டுக்குள் வைப்பது மிகக் கடினம் என்று கூறியது. இத னால் அரசுக்கு கடுமையான கடன் சுமை ஏற்படும் என்று தெரிவித்தது.

ஜிஎஸ்டி விதிப்பால் வரி வருவாய் 52 சதவீதத்தில் இருந்து 44 சதவீதமாக குறைந்து உள்ளது. தவிர, தற்போதைய பொருளாதார மந்த நிலையிலிருந்து இந்தியாவை மீட்டெடுக்கும் பொருட்டு மத்திய அரசு சலுகை திட்டங்களை அறிவித்தது. நிறுவனங்களுக்கான நிறுவன வரி 10 சதவீதம் அளவில் குறைக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரி வருவாய் இழப்பு என்று தெரிவிக்கப் பட்டது. இதன் காரணமாகவும் நிதிப் பற்றாக்குறை விகிதம் உயரும். தற்போதைய பொருளாதார நிலை யின் விளைவாக அடுத்த ஆண்டு நிறுவனங்களின் கடன் நிலை பாதிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x