Published : 17 Nov 2019 12:25 PM
Last Updated : 17 Nov 2019 12:25 PM
மும்பை
நடப்பு நிதி ஆண்டில் இந்தியா வின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவைக் காணும் என்று பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி தொடர்பான தேசியக் குழு (என்சிஏஇஆர்) தெரிவித்துள் ளது. மக்களின் நுகர்வு திறன் சரிந்து தேவை குறைந்துள்ளதால், வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அக்குழு தெரிவித்து உள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் இரண் டாம் காலாண்டில் வளர்ச்சி 4.9 சதவீதமாக குறையும் என்று கூறி உள்ளது. முதல் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் 5 சதவீதமாக சரிந்தது. இந்நிலையில் தற்போதைய பொரு ளாதார நெருக்கடி நிலை காரண மாக இரண்டாம் காலாண்டில் வளர்ச்சி விகிதம் மேலும் குறையக் கூடும் என்று அக்குழு தெரிவித்து உள்ளது. மேலும், 2019-20-ம் நிதி ஆண்டில் வளர்ச்சி 4.9 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.
ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத்தின் நிதி மோசடியால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்து உள்ளன. அதுவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக அந்தக் குழு தெரிவித்து உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT