Published : 13 Aug 2015 10:09 AM
Last Updated : 13 Aug 2015 10:09 AM
நாட்டின் மறைமுக வரி வருமானம் 37 சதவீதம் அதிகரித்துள்ள திலிருந்தே நாட்டின் பொருளா தாரம் வளர்ச்சியடைந்து வரு கிறது என்பது தெரிகிறது என்று தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி காணப்பட்டு வருவதன் வெளிப்பாடே இத்தகைய மறைமுக வரி வசூல் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
டீசல், பெட்ரோல் மீதான உற்பத்தி வரி அதிகரித்துள்ளதும் உற்பத்தி வரி வசூல் அதிகரித்துள்ளதற்கு முக்கியக் காரணம். ஏப்ரல் முதல் ஜூலை வரையான காலத்தில் உற்பத்தி வரி வசூல் 75.4 சதவீதம் உயர்ந்து ரூ. 83,454 கோடியாக உயர்ந்துள்ளது. சேவை வரி வருமானம் 20.1 சதவீதம் உயர்ந்து ரூ. 60,925 கோடியைத் தொட்டுள்ளது. சுங்க வரி வசூல் 21 சதவீதம் உயர்ந்து ரூ. 66,076 கோடியாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT