Published : 06 Nov 2019 11:00 AM
Last Updated : 06 Nov 2019 11:00 AM
புதுடெல்லி
வங்கி தொடர்பான பணப்பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியமானது. தற்போதைய நிலையில் பான் கார்டுக்கு விண்ணப்பித்து, அவை கிடைப்பதற்கு சில வாரங்கள் வரை ஆகின்றன.
இந்நிலையில் விண்ணப்பித்த உடனயே பான் கார்டு கிடைக்கும் வகையில் வருமானவரித் துறை புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, ஆதார் கார்டு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இ-பான் கார்டு உடனடியாக வழங்கப்பட உள்ளது. அடுத்த சில வாரங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.
எந்த செலவும் இல்லாமல் இந்த வசதியின் மூலம் இ-பான் கார்டு பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையைப் பெற இணையத்தின் மூலம் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதார் கார்டு தவிர வேறு எந்த ஆவணங்களும் தேவையில்லை. இது தொடர்பான ஆரம்பகட்ட சோதனையில், 8 நாட்களில் 62,000 பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த வசதி நாடுமுழுவதும் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT