

சிங்கப்பூர்
ஜிஎஸ்டி முறையில் இந்தியா, சிங்கப்பூரை பின்பற்றலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார். சிங்கப் பூர் ஒரே அளவிலேயே ஜிஎஸ்டி விகிதத்தை பின்பற்றி வருகிறது. ஆனால் இந்தியா பல்வேறு அடுக்குகளில் ஜிஎஸ்டியை வகுத்து உள்ளது. இதன் காரண மாக தொழில் நிறுவனங்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. இந்நிலையில், இந்தியாவும் சிங்கப்பூர்போல் எளிமையான அளவில் ஜிஎஸ்டியை வகுக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதுக்கும் ஒரே வரியாக ஜிஎஸ்டி 2017-ம் ஆண்டு ஜுலை முதல் நடை முறைக்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி 5% 12% 18% 28% என பல பிரிவுகளில் ஜிஎஸ்டியை வகுக்கப்பட்டு உள்ளது. ஆனால் சிங்கப்பூர் அரசு அனைத்து தயாரிப்புகளுக்கும் ஒரே அளவில், 7 சதவீத வரி விகிதத்தைப் பின்பற்றி வருகிறது. இந்தியாவும் அதுபோல் தன் வரி முறையை மாற்ற வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்சிடர் பார்ட்னர்ஸ் என்ற ஜிஎஸ்டி தொடர்பான ஆலோசனை நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் அபிஜித் நாத் கூறியதாவது: வணிகப் போக்கை எளிமையாக்கவும், குழப்பம் ஏற்படாத வகையிலும் இந்தியா அதன் ஜிஎஸ்டி முறையை மாற்ற வேண்டும். தற்போதையை நிலையில் இந்தியா இரு விகித அளவில் ஜிஎஸ்டி முறையை திட்டமிட வேண்டும் என்று அவர் கூறினார்.
‘சிலானா சிலானா’ சட்ட அலுவலகங்களின் நிர்வாக பங்குதாரர் சந்தீப் சிலானா, இந்திய குறைந்தபட்ச வரி விகித முறையை நோக்கி நகர வேண்டும் என்று கூறினார். பிற நாடுகள், அதன் வருவாயைக் கணக்கில் கொண்டு ஒரே அளவிலான ஜிஎஸ்டியை அனைத்து பிரிவுகளுக் கும் உருவாக்கி உள்ளன.
ஆனால் இந்தியா ஒவ்வொரு பிரிவுக்கும் தனித் தனியே பல் வேறு அடுக்குகளில் ஜிஎஸ்டியை உருவாக்கி உள்ளது. அதை இந்தியா மாற்ற வேண்டும். தற் போதையை நிலையில் 6 சதவீதம் மற்றும் 14 சதவீதம் என இரு அளவுகளில் ஜிஎஸ்டியை நடை முறைபடுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
சென்டெனியல் ஆசியா அட்வைசர்ஸ் நிறுவனத்தின் சிஇஓ மனு பாஸ்கரன் கூறியபோது, ஜிஎஸ்டி மிகச் சிறந்த வரி முறை ஆகும். சூழலுக்கு ஏற்ப அவை உருவாக்கப்பட வேண்டும். அந்த வகையில் இந்தியாவுக்கு சிங்கப்பூர் முன்னுதாரண நாடாக உள்ளது என்று கூறினார்.