Published : 31 Oct 2019 05:39 PM
Last Updated : 31 Oct 2019 05:39 PM
மும்பை
பங்குச்சந்தைகளில் 2வது நாளாக இன்றும் ஏற்றம் காணப்பட்டது.
வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் காலாண்டு அறிக்கையில் அவற்றின் வர்த்தகம் நம்பிக்கை அளிக்கும் வகையில் காணப்படுகிறது. இதன் தாக்கத்தால் பங்குச்சந்தையில் நேற்று திடீர் ஏற்றம் காணப்பட்டது.
பங்குகள் மதிப்பு ஒரே நாளில் ரூ2.73 லட்சம் கோடி உயர்ந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் வர்த்தக இடையில் அதிகபட்சமாக 601 புள்ளிகள் உயர்ந்தது.
நேற்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 581 புள்ளிகள் உயர்ந்து, 39,831 புள்ளிகளில் நிலை பெற்றது. அதேபோல், நிப்டி 159 புள்ளிகள் உயர்ந்து 11,786 புள்ளிகளாக இருந்தது.
இந்தநிலையில் பங்குச்சந்தைகளில் இன்றும் ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 17 புள்ளிகள் உயர்ந்து, 40,129 புள்ளிகளில் நிலை பெற்றது. நிப்டி 33 புள்ளிகள் உயர்ந்து 11,878 புள்ளிகளாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT