Published : 29 Oct 2019 12:46 PM
Last Updated : 29 Oct 2019 12:46 PM
பெங்களூரு
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நஷ்டம் 86 சதவீதம் அதிகரித்து ரூ. 3,836 கோடியாக உயர்ந்துள்ளது.
2019-ம் நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் வருமானம் 43 சதவீதம் அதிகரித்து ரூ. 30,931 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு (2018) ஜூலை 18-ம் தேதி நடந்த ஆண்டு இயக்குநர் கூட்டத்தில் நிறுவனத்தின் நிதிநிலை விவரம் பரிசீலிக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் முந்தைய முதலீட்டாளர்களான ஆக்ஸெல் இந்தியா வெஞ்சர்ஸ் -2 (மொரீஷியஸ்) லிமிடெட், ஆக்ஸெல் குரோத் எப்ஐஐ (மொரீஷியஸ்) லிமிடெட், டைகர் குளோபல் இன்டர்நேஷனல் 2 ஹோல்டிங்ஸ் மற்றும் பிராதன நிறுவனமான பிளிப்கார்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட பழைய உரிமைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டது. அந்நிறுவனங்கள் மேற்கொண்டிருந்த முதலீடுகளுக்கு ஏற்ற வகையில் அவற்றுக்கான பங்குகள் உள்ளிட்டவற்றை அளிப்பது குறித்தும் இதில் பரிசீலிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் இன் கார்ப்பரேஷன் இந்நிறுவனத்தை வாங்கியது. இதனால் இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த பிற நிறுவனங்களின் பங்குகள் அனைத்தும் தற்போது வால்மார்ட் வசம் சென்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT