Published : 23 Oct 2019 05:33 PM
Last Updated : 23 Oct 2019 05:33 PM
புதுடெல்லி, பிடிஐ
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 4ஜி சேவையை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது. பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
நிதி நெருக்கடிக்குள்ளான அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனங்களான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) மற்றும் மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட் (எம்.டி.என்.எல்) ஆகியவற்றை புதுப்பிப்பதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது
இந்த இரண்டு அரசுத்துறை நிறுவனங்களுக்கும் புத்துயிர் அளிக்க அரசு ரூ.29,937 கோடி நிதியை உள்ளிட முடிவு செய்துள்ளது. இந்த புத்துயிரூட்டும் பேக்கேஜில் ரூ.15,000 கோடி அரசுப் பத்திரங்கள் மூலமும், ரூ.38,000 கோடி சொத்துக்களை பணமாக்கவும் அடுத்த 4 ஆண்டுகளில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) போன்ற திட்டங்களுக்கும், 4ஜி ஸ்பெக்ட்ரம்களை ஒதுக்குவதற்கும், சொத்துக்களைப் பணமாக்குவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT