Published : 09 Oct 2019 04:59 PM
Last Updated : 09 Oct 2019 04:59 PM

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்: சென்செக்ஸ் 646 புள்ளிகள் உயர்வு 

மும்பை

பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் உயர்ந்து காணப்பட்டது.

வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்களின் 2-வது காலண்டு நிதி நிலை தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட நிறுவனங்கள் கணிசமாக லாபம் ஈட்டியுள்ளன. இதன் எதிரொலியாக பங்குச்சந்தைகளில் இன்று வணிகம் உயர்ந்து காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 646 புள்ளிகள் உயர்ந்து 38,177 புள்ளிகளை தொட்டது. அதுபோலேவே தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 187 புள்ளிகள் அதிகரித்து 11,313 புள்ளிகளாக உயர்ந்தது.

குறிப்பாக வங்கித்துறை பங்குகள் உயர்ந்தன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இண்டெஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கித்துறை பங்குகளும், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x