Published : 09 Oct 2019 09:27 AM
Last Updated : 09 Oct 2019 09:27 AM

தானியங்கி தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தின்கீழ் சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியவர்கள் பட்டியல் இந்திய அரசிடம் ஒப்படைப்பு: சட்ட ரீதியான நடவடிக்கைக்கு வாய்ப்பு

பெர்ன்

சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கிய இந்தியர்கள் பற்றிய பட்டியலை அந்நாட்டு அரசு இந்திய அரசிடம் ஒப்படைத்துள்ளது. சுவிட்சர்லாந்து அரசு உருவாக்கியுள்ள தானியங்கி தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் (ஏஇஓஐ) இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், முறையாக கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து, அங்கு பணம் பதுக்கியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

வருமான வரி செலுத்துவதி லிருந்து தப்பிப்பதற்காக இந்திய தொழிலதிபர்கள், அரசியல்வாதி கள் உள்ளிட்ட கோடீஸ்வரர்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை பதுக்குகின்றனர். இத னால் கருப்பு பணம் அதிகரித்து வருகிறது. இவ்வகையான முறை கேடான செயல்பாடுகளைத் தடுக்க இந்திய அரசு பல்வேறு முயற்சி களை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருக் கும் நபர்களின் பட்டியலை தர வேண்டும் என்று இந்திய அரசு சுவிட்சர்லாந்து அரசிடம் வேண்டு கோள் விடுத்திருந்தது. இந்நிலை யில் தானியங்கி தகவல் பரிமாற்ற கட்டமைப்பின்கீழ் இந்திய அர சுக்குத் தேவையான தகவலை சுவிட்சர்லாந்து அரசு வழங்கியுள் ளது. முதல் தடவையாக இந்த புதிய வழிமுறையின் கீழ் இந்தியா தகவல்களைப் பெற்றுள்ளது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர் கள் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்களை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று அந்நாடு கள் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், அவர்களைப் பற்றிய உரிய தகவலை அந்நாடுகளுக்கு தெரியப்படுத்தும் விதமாக தானியங்கி தகவல் பரிமாற்ற முறையை கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தி யது. இந்த தகவல் பரிமாற்றத் துக்கு குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே சுவிட்சர்லார்ந்து ஒப்பு தல் வழங்கியுள்ளது. இந்த தகவல் பரிமாற்ற கட்டமைப்பின்கீழ் தக வலை பெறுவதற்கு மொத்தமாக 75 நாடுகளுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அவற்றில் இந்தியாவும் ஒன்று.

இந்தக் தகவல் பரிமாற்ற கட்ட மைப்பின் கீழ், சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் நபரைப் பற்றிய தகவல்கள்; அதாவது அவருடைய பெயர், முகவரி, அவருடைய வங்கிக் கணக்கு சார்ந்த விவரங்கள், அதன் நிதி விவரங்கள் குறிப்பாக வைப்பு நிதி, வட்டி வருவாய், காப்பீட்டு திட்டங்கள் போன்ற விவரங்கள் அளிக்கப்படும்.

அதன்படி, தற்சமயம் செயல் பாட்டில் இருக்கும் இந்தியர்களின் சுவிஸ் வங்கிக் கணக்கு விவரங் கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர, 2018-ம் ஆண் டில் கணக்கு வைத்திருந்தவர்களின் விவரங்களும், அந்த ஆண்டு வங்கிக் கணக்கை முடித்தவர்களின் விவரங்களும் வழங்கப்பட்டு உள்ளன. இந்த தகவல்களின் அடிப் படையில், கணக்கில் காட்டாமல் சொத்துக்களை வைத்திருந்த அல்லது வைத்திருப்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

இதுகுறித்து சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்ட அறிக்கையில், “சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என்று இந்திய அரசு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தது. பல்வேறு பரிசீலனைக்குப் பிறகு அந்தத் தகவல்களை வழங்கி வருகிறோம். இதற்கென ஏஇஓஐ என்றழைக்கப்படும் தானியங்கி தகவல் பரிமாற்ற முறையை ஏற்படுத்தியுள்ளோம். அதன்படி சுவிஸ் வங்கிகளில் கணக்கு திறக் கும் இந்தியர்களின் விவரங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு வழங் கப்படும். இதனால் வரி ஏய்ப்பில் ஈடுபடும் நபர்களை இந்திய அர சால் எளிதாக அடையாளம் காண முடியும்” என கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற அடுத்த பட்டியலை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x