Published : 04 Oct 2019 10:04 AM
Last Updated : 04 Oct 2019 10:04 AM

பிஎம்சி வங்கி விவகாரம்: ஹெச்டிஐஎல் இயக்குநர்கள் 2 பேர் கைது

மும்பை

நிதி நெருக்கடிக்கு உள்ளான கட்டுமான நிறுவனமான ஹெச்டிஐஎல் நிறுவனத்தின் இயக்குநர்கள் சரங் வாத்வான், ராகேஷ் வாத்வான் ஆகி யோரை பொருளாதார விவ காரங்களுக்கான(இஓ டபிள்யூ) அதிகாரிகள் கைது செய்தனர். பிஎம்சி வங்கி விவ காரம் தொடர்பாக இவர்களிரு வரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.3,500 கோடி மதிப்பி லான சொத்துகளும் முடக்கப் பட்டுள்ளன.

பஞ்சாப் மற்றும் மகாராஷ் டிர கூட்டுறவு வங்கி விவகாரம் தொடர்பாக கடந்த திங்கள் கிழமை மும்பை போலீஸார் வங்கி நிர்வாகிகள் மற்றும் ஹெச் டிஐஎல் நிறுவன அதி காரிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில் பிஎம்சி வங்கி யின் இயக்குநர் ஜாய் தாமஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட் டார். பிஎம்சி வங்கி மூலமாக ஹெச்டிஐஎல் நிறுவனத்துக்கு ரூ. 6,500 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. தற் போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாட்டு வரம்பை விட 4 மடங்கு அதிக மாகும். அத்துடன் வங்கியின் மொத்த சொத்து மதிப்பான ரூ.8,800 கோடியில் 73 சதவீதம் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 23-ம் தேதி பிஎம்சி வங்கியின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது.

அடுத்த 6 மாதங்களுக்கு புதிதாக கடன் வழங்குவது, புதிதாக சேமிப்புகளை ஏற்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு உத்தர விட்டது. பிஎம்சி வங்கி தலை வர் வார்யம் சிங், ஹெச்டி ஐஎல் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் 2006-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இருந்துள்ளார்.

இந்த காலகட்டத்தில்தான் கடன் வழங்கப்பட்டுள்ளது. பிஎம்சி வங்கியின் தலைவர் மற்றும் சில அதிகாரிகள் மீது குற்றப் பிரிவு என் 409, 420, 465, 471, 120 (பி) ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x