Published : 02 Oct 2019 08:37 AM
Last Updated : 02 Oct 2019 08:37 AM
புதுடெல்லி
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு வரி வசூல் செப்டம்பர் மாதத் தில் 2.67 சதவீத அளவுக்கு சரிந் துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப் பட்ட பிறகு கடந்த 19 மாதத்தில் மிகக் குறைவான அளவுக்கு வரி வசூலாகியுள்ளது. செப்டம்பரில் மொத்தம் வசூலான தொகை ரூ. 91,916 கோடியாகும்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான தொகையுடன் ஒப்பிடுகையில் வரி வருமானம் 2.67 சதவீதம் குறைந்துள்ளது. மொத்தம் வசூலான தொகையில் சிஜிஎஸ்டி ரூ. 16,630 கோடி. எஸ்ஜி எஸ்டி ரூ. 22,598 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.45,069 கோடியாகும். இதில் இறக்குமதி மூலம் வசூலான தொகை ரூ.22,097 கோடி, செஸ் ரூ.7,620 கோடியும் அடங்கும்.
ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டிஆர் 3 பி ரிட்டர்ன் படிவம் தாக்கல் செய் துள்ள விண்ணப்பங்களின் எண் ணிக்கை 75.94 லட்சமாகும். ரூ.21,131 கோடி தொகை சிஜிஎஸ்டி -யிலிருந்து திரும்ப அளிக்கப்பட் டுள்ளது. ரூ. 15,121 கோடி எஸ்ஜி எஸ்டி-யிலிருந்து திரும்ப அளிக்கப் பட்டுள்ளது. திரும்ப அளிக்கப்பட்ட தொகைக்குப் பிறகு சிஜிஎஸ்டி ரூ. 37,761 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ. 37,719 கோடியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT